
Preview 15 sec
சிறைச்சாலையில் மோதல்: கைதி ஒருவரின் மரணம்
Script Vidéo
சிறைச்சாலை ஒன்றுக்குள் இடம்பெற்ற மோசம் சம்பவம் ஒன்றில் கைது ஒருவர் கொல்லப்பட்டார்.
Yvelines மாவட்டத்தில் உள்ள Bois-d'Arcy தடுப்பு மையத்தில் இச்சம்பவம் நேற்று முன்தினம் மே 6, செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அன்று மாலை 7 மணி அளவில் இரு கைதிகளிடையே மோதல் இடம்பெற்றது. இதில் 21 வயதுடைய கைதி ஒருவர் மோசமாக தாக்கப்பட்டார். இதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவசரப்பிரிவு மருத்துவத்துறையினர் அழைக்கப்பட்டனர். சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் அது பலனளிக்கவில்லை எனவும், அவர் உயிரிழந்துள்ளதையும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
25 வயதுடைய கைதி காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டார். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.